பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்ய பட்டுள்ளது.
தலைநகர் பாட்னவில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிதாக விரிவாக்கம் செய்ய பட்டுள்ள 31 அமைச்சர்கள் ஆளுநர் தலைமையில் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் 16 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் அடங்குவர்.
காங்கிரஸ் சார்பில் 2 அமைச்சர்கள், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11 பேர் பதவி ஏற்றனர்.
சுயேச்சை வேட்பாளர் ஒருவரும், முன்னாள் முதல்வரின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி சார்பில் ஒருவர் என 31 அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையில் தலைநகர் பாட்னாவில் பதவி ஏற்றனர்.
Tags
National news