செம்பருத்தி ஷாபனா
தமிழ் நாட்டில் இருக்கும் டாப் 3 தொலைகாட்சியில் ஒன்று தான் ஜீ தமிழ். அதில் ஒளிபரப்பான செம்பருத்தி மெகாதொடர் மூலம் அறிமுகமானார் ஷாபனா மற்றும் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் மூலம் நல்ல வரவேற்பை பெற்றவர் ரேஷ்மா.
இரு நடிகைகளும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் மிக நெருக்கமான தோழிகள் என்பதில் ஆச்சரியம் இல்லை. சமீபத்தில் தான் இந்த இருவருக்கும் அடுத்து அடுத்து திருமணம் முடிந்தது. சில நாட்கள் முன் ஷாபனா விதவிதமாக போடோஷூட்டை நடத்தி போட்டோக்களை அப்லோட் செய்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். நெடிசன்கள் இவர் சினிமா வாய்ப்புக்காக போட்டோஷூட்டை எடுத்து வருவதாக கமென்ட் செய்து வந்தனர்.
ஆனால், ஷாபனா மற்றும் ரேஷ்மா இருவரும் ஒரே படத்தில் அறிமுகமாகி நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் தோழிகள் இருவரும் ஒரே படத்தில் அறிமுகம் ஆவதை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.