பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகிய பொன்னியின் செல்வன் வரும் 30 தேதி வெளிவர இருக்கிறது . இதற்காக நடிகர்கள் புது விதமாக புரொமோஷன் செய்ய ஆரம்பித்துள்ளனர் .
விக்ரம்
நடிகர் விக்ரம் இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்து உள்ளார். மேலும் இவரது தங்கையாக குந்தவை தேவியாக நடிகை திரிஷா மற்றும் தம்பி அருண்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவி நடிக்கிறார்.
இப்போது, விக்ரம் தனது twitter பக்கத்தில் டிவிட்டரில் தன்னுடைய பெயரை ஆதித்ய கரிகாலன் என்று மாற்றி இருக்கிறார். மாற்றியது மட்டும் இல்லாமல் தான் தஞ்சைக்கு வருவதாகவும் உடன் வந்திய தேவன் வருவதாகவும் டிவிட்டர் பதிவிட்டுள்ளார். நீயும் தம்பி அருண்மொழி வர்மனை இழுத்து வா என்று கூறி இருக்கிறார்.
திரிஷா
நடிகை திரிஷா இதற்கு முன்னரே தன்னுடைய டிவிட்டர் பெயரை குந்தவை என மாற்றி உள்ளார்.
நடிகர் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி டிவிட்டரில் விரைவில் தங்களுடைய பெயர்களை மாற்றுவார்கள் என்று தெரிகிறது .
பொன்னியின் செல்வன் படத்திற்கு மக்கள் ஆவலாக காத்து கொண்டு இருக்கிறார்கள்.
சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா! @Karthi_Offl @actor_jayamravi @trishtrashers pic.twitter.com/6JW2s8cfK8
— Aditha Karikalan (@chiyaan) September 13, 2022