பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக கிட்டித்தட்ட 500 கோடி செலவில் 2 பாகமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் நாள் வெளியாகிறது .
இந்த படத்தில் நடிகர் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம்ரவி,ஐஸ்வர்யா ராய் ,திரிஷா ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் சோபிதா போன்ற நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்து இருக்கிறார்கள் . கல்கியின் பொன்னியின் செல்வனில் பூங்குழலி கதாப்பாத்திரம் மிக முக்கியமான கேரக்டர் . மணிரத்னம் பொன்னியின் செல்வனில் பூங்குழலி ஆக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி அருமையாக நடித்து இருக்கிறார் .
முதலில் பூங்குழலியாக நடிக்க இருந்தது நடிகை அமலாபால் ஆம் என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது .
நடிகை அமலாபால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 2021 ஆம் ஆண்டு எனக்கு மணிரத்னம் சார் எடுக்கும் பொன்னியின் செல்வனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது,ஆனால் சில காரணங்களால் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் .இதை கேள்வி பட்டதும் சில ரசிகர்கள் நடித்து இருந்தால் நன்றாக இருக்கும் , ஆனால் நடிக்காமல் இருந்தது அதைவிட நன்றாக உள்ளது என கமெண்ட் செய்து வருகிறார்கள்