விஜய் டிவி
இந்தியாவில் சினிமாவுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவு சீரியலுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் காலையில் 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை அனைத்து சேனலிலும் ஒளிபரப்பாகும் சீரியல் எண்ணிக்கை ஏராளம். இதனால் ஏற்படும் போட்டியால் ஏராளமான சீரியல் தொடங்கிய கொஞ்ச நாட்களில் முடிவுக்கு வருகிறது.
இப்போது எல்லாம் சீரியல் நல்ல வரவேற்பை பெற்றால் சீரியல்கள் தொடர்ந்து telecast ஆகிறது . ஆனால் தொடர்ந்து மோசமான மற்றும் TRP இல் மந்தமாக இருக்கும் சீரியல் உடனடியாக முடிவுக்கு வருகிறது.
தற்போது , விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல் முடியும் நிலையை எட்டியுள்ளது. ஆம், மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் சீரியல் முடிவுக்கு வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி ஆரம்பத்தில் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் இப்போது தொடர்ந்து மோசமான விமர்சனங்களால் இந்த சீரியலை முடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் , விஜய் டிவியில் அந்த time slot இல் புதிய சீரியலை களம் இறக்க விஜய் டிவி முடிவு செய்து இருப்பதும் ஒரு காரணம். இதனால் பாவம் கணேசன் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் .