பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் முன்பதிவு மட்டுமே பல கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
விக்ரம் ,ஐஸ்வர்யா ராய் ,கார்த்தி ,ஜெயம்ரவி,திரிஷா மற்றும் பல முன்னணி சினிமா பிரமுகர்கள் நடித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் படக்குழு ஈடுபட்டுவருகிறது. சமீபித்தில் 2 நாட்களாக மும்பையில் படக்குழு ப்ரோமோஷன் வேளையில் பிஸி ஆக இருக்கிறது .
முன்பதிவு
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் முன்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கிட்டத்தட்ட 75000 மேல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது . இதன் இந்திய மதிப்பு 1.5 கோடிக்கு மேல் என்று தகவல் வெளியாகி உள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் இவ்வளவு கோடி வசூல் செய்துள்ளதால் படம் ரிலீஸ்க்கு முன்பே அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 10 கோடிக்கு மேல் வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .