பொன்னியின் செல்வன்
இந்திய சினிமாவில் மாபெரும் டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் 2 பாகமாக எடுக்கப்பட்டு வரும் செப்டம்பர் 30 ஆம் நாள் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரீலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 2 பற்றி மாஸ் அப்டேட்ஸ் கொடுத்தார் டைரக்டர் மணிரத்னம். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் , ஐஷ்வர்யா லட்சுமி, மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் தற்போது படக்குழு மற்றும் நடிகர்கள் பிஸியாக இருக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் பாகம் 2
சென்னையில் நடந்த அப்படி ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிரத்னம் இடம் செய்தியாளர்கள் பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த பாகம் எப்பொது வரும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு டைரக்டர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் ரீலீஸ் ஆகி 6 முதல் 9 மாதங்களுக்குள் கண்டிப்பாக வரும் என்று உறுதி அளித்து இருக்கிறார்.