பொன்னியின் செல்வன்
திரு.மணி ரத்னம் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். நேற்று இதன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் திரைத்துறை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியாகி நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் ஒவ்வொரு காட்சிகளில் நம்மை சோழ தேசத்துக்கு கொண்டு போகிறார் .
பொன்னியின் செல்வன் exclusive images hd
பொன்னியின் செல்வனில் வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் கார்த்தி இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது,
கார்த்தி பேச்சு
கமல் சார், முதல உங்களுக்கு மிக பெரிய நன்றி என்று கூறி தனது பேச்சை தொடங்கினார்.
கமல் சார் பொன்னியின் செல்வன் படத்தை எங்களுக்கு விட்டு வச்சதுக்கு முதலில் மிக பெரிய நன்றி என்றார். நீங்கள் நடிக்காத கேரக்டர் எதும் இல்லை இனிமேல் ஆனால் நீங்க மட்டும் அன்றே இதை எடுத்து இருந்தால் நாங்கள் இன்று இந்த மேடையில் நிற்க்கும் வாய்ப்பு எங்களுக்கு நிச்சயம் கிடைத்திருக்காது . அதும் நீங்க நடிக்க வேண்டிய படத்தில் நாங்கள் நடித்தது மிக பெரிய அதிர்ஷ்டம் என கருதுகிறேன். இதற்கு தான் கமலுக்கு பெரிய நன்றி தெரிவித்தார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் speech in Ponniyin Selvan audio launch
கமல்
பொன்னியின் செல்வன் படத்தை முதலில் எடுக்க ஆசை பட்டது MGR அவர்கள் . அவர் எடுக்க ஆரம்பித்து பின்னர் எடுக்க முடியாமல் போனது.
அதற்கு பின் கமல் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க போவதாக தகவல் வெளியாகி வந்தது. ஆம் கமல் இந்த படத்தை தயாரிக்க ஆசை படுவதாகவும் மற்றும் இயக்குநர் மணிரத்னம் தான் இயக்க வேண்டும் என்று ஆசை படுவதாக தகவல் வெளியாகி வந்தது. பின்னர் சிலபல காரணங்களால் அதும் கை கூடாமல் போனது.
40 வருடங்களுக்கு பிறகு அந்த கனவை இயக்குநர் திரு. மணிரத்னம் அவர்கள் உண்மை ஆக்கி இருக்கிறார்.